ஜெயலலிதா மரணம் – சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழக அரசு மற்றும் சிபிஐயிடம் மனு அளிக்காமல் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியமும், வெளிப்படை தன்மையும் பின்பற்றவில்லை என்றும் அதிகாரிகள், அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில போலீசை விசாரணைக்கு நியமிப்பது நியாயமானதாக இருக்காது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்