உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
இன்று தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்துகள்! சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு’ என பதிவிட்டுள்ளார்.
அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்!
அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு #NationalPressDay வாழ்த்துகள்!
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு— M.K.Stalin (@mkstalin) November 16, 2022