கல்வி நிறுவனங்களில் ராக்கிங்..! டிஜிபி அதிரடி உத்தரவு..!

Default Image

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை. 

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கல்வி நிறுவனங்களில் ராகிங் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பின்வரும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • மாணவர்களிடையே ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
  • இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினரும் மற்றும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி/மொபைல்/ வாட்ஸ் ஆப் எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
  • கல்வி வளாகத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
  • பெறப்பட்ட புகார்களை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். சட்டக் கருத்துக்கள் பெறுவதில் தாமதம் கூடாது.
  • வழக்குகள் கோப்பில் எடுக்கப்படாத பட்சத்தில். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக கோப்புக்கு எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

raking

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்