கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்கலாம் – ஐகோர்ட் அனுமதி

Default Image

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என உயர்  நீதிமன்றம் நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17-ஆம் தேதி வன்முறை ஏற்பட்ட நிலையில்,அன்று முதல் பள்ளி மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளி சீரமைப்பு பணி சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

இந்த சமயத்தில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் திறக்க கோரி பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 21க்கு ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்