மருத்துவ கல்லூரி ரேக்கிங் விவகாரம்.! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.! நிர்வாகம் அதிரடி உத்திரவாதம்.!

Default Image

மாணவர்களின் ரேகிங் செயல் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர் என வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

சில தினங்களுக்கு முன்னர் சேலம் தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்து, மேலாடை இன்றி கல்லூரி வளாகத்தில் வரவழைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிக வைரலானது.

இந்த சம்பவம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ரேகிங் குறித்து அதனை தடுக்க ஏன் முன்கூட்டியே குறிப்பிட்ட தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்

கல்வி நிலையங்களில் ஒழுக்கம் இல்லாமல் பயின்று தங்கப்பதக்கம் வென்றாலும் அது பயனில்லை. இது குறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கம் தரவேண்டும் எனவும் உத்தரவிட்ட்டனர்.

ரேகிங் செயல் உறுதிப்படுத்தப்பட்டால், மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர் என கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தது. இந்த ரேகிங் சம்பவம் குறித்து ஏற்கனவே 7 சீனியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்