தொடர் கனமழை எதிரொலி.! திருவள்ளூரில் 1155 ஏரிகளின் தற்போதைய நிலைமை.!

Default Image

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக முழுவதுமாக நிரம்பியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தற்போது அதிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள  நீர்நிலைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது .

அதில், மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக முழுவதுமாக நிரம்பியுள்ளது. மேலும், 158 ஏரிகளில் 75 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது எனவும், 295 ஏரிகளில் 50 சதவீத நீரும் நிரம்பியுள்ளது எனவும், 358 ஏரிகளில் 25 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்