தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிரடி சோதனை! கோவையில் மட்டும் 20 இடங்கள்…

Default Image

அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, கோவையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டை மேடு. உக்கடம், பொன்விழா நகர் உட்பட கோவையில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று சென்னையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுப்பேட்டை, பெரம்பூர் ஜமாலியா மண்ணடி ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ராமநாதபுரம், மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்