திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததில்…பாகன் பலி..!!

Default Image

திருச்சியில் மதம் பிடித்த சமயபுரம் கோவில்  யானை  தூக்கி வீசியும் மிதித்தும பாகனை கொன்றது.

திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. 9 வயதான இந்த பெண் யானை கோவில் திருப்பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யானையின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றத்தை உணர்ந்த பாகன் கஜேந்திரன் அருகில் சென்று பார்த்தார்.

அப்போது கரும்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசிய யானை ஆவேசமாக பிளிறியது. மேலும் ஆவேச நிலையில் இருந்த யானை பாகன் கஜேந்திரனை தூக்கி வீசியதுடன் மிதித்துக் கொன்றது.

பாகனை யானை தாக்கியதை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டு கோவிலின் 4 வாயில்களும் முடப்பட்டன. இதையடுத்து கோவில் வளாகத்துக்குள் பிளிறியபடி யானை சுற்றிச் சுற்றி ஓடியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்