பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 ரொக்கம்? – தமிழக அரசு முடிவு!
2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படலாம் என தகவல்.
2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூ.1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும், இதில் பல்வேறு முறைகேடு நடத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்தனர்.
இந்த நிலையில், 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் நியாயவிலை கடைகளில் ரொக்கமாக வழங்க அரசு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படலாம் என தகவல் கூறப்படுகிறது. விரைவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.