சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்கவில்லை என்றால் இந்தியா 140 ரன்கள் எடுப்பது கஷ்டம் தான்- கவாஸ்கர்

Default Image

சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க தவறினால் இந்தியா 140-150 ரன்கள் அடிப்பது கஷ்டம் தான் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் பாக். அணி நியூசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க வில்லையெனில் இந்தியா, நிச்சயம் 140 – 150 ரன்கள் அடிக்க திணறும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் மட்டும் 61*ரன்கள்(25 பந்துகளில்) அடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா 150 ரன்களைக் கடந்திருக்காது.

தற்போது சூர்யகுமார் இருக்கும் ஃபார்முக்கு அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். அவரை தற்போதைய “மிஸ்டர் 360 டிகிரி” என்றே கூறலாம். தற்போது இந்தியாவில் சூர்யகுமார், கோலி மற்றும் ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் ரன்கள் அடிக்கவில்லையெனில் ராகுல் அந்த இடத்தில் பொறுப்பேற்று விளையாட வேண்டும்  என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்