பெங்களூரூ-கோவை வழியாக கடத்தப்பட்ட 840 கிலோ குட்கா பறிமுதல்..!!

Default Image

பெங்களூரூவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 840 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை ராஜவீதி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு சிறிய ரக சரக்கு வேன்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன்களின் ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.

ஓட்டுனர்களை துரத்திப்பிடித்த போலீசார், மினி ஆட்டோக்களில் சோதனை நடத்தியர். அதில் 840 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் இரண்டு இரு சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனர்கள் பாப்பு, அசோக் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்