தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!!வானிலை மையம்..!!

Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியில் நிலவுகிறது.

மேலும் மாலத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கையில் 9 செமீ, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 5 செமீ, திண்டுக்கல் மாவட்டம் சத்திரபட்டியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்