ரஷ்யாவின் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் பலி.!

Default Image

ரஷ்யாவின் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவின் கோஸ்டரோமா  நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 250 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுயுள்ளது. பாலிகான் எனும் மதுபான விடுதியில், மது அருந்திய நபர் ஒருவர் “ஃப்ளேர் கன்” மூலம் சுட்டதில் தீ பிடித்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு 2 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் மாஸ்கோ விலிருந்து 300கி.மீ தொலைவில் இருக்கும் இந்த நகரத்தின் தீவிபத்து ஏற்பட்ட சில நேரங்களில் 250 பேர் உள்ளிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆளுநர் செர்ஜி சிட்னிகோவ் கூறிய முதல்கட்ட தகவலின்படி 13 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினார், ஆனால் அவசரகால சேவைகள் பின்னர் மேலும் இரண்டு பேரின் உடல்களைக் கண்டுபிடித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்