தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே RSS அமைப்பின் நோக்கம் – அமைச்சர் சேகர் பாபு
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே RSS அமைப்பின் நோக்கம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
அமைச்சர் சேகர்பாபு சென்னையில் பட்டாளம் பகுதியில் உள்ள குக்ஸ் சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின் மழைக்கால காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 98 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது. மீண்டும் மழை பெய்தாலும் அதனை சமாளிக்கவும் தயாராக உள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் அங்கங்கே மருத்துவ முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கான முடிவுகளையே முதல்வர் எடுப்பார். ஆனால், தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே RSS அமைப்பின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.