மற்றுமொரு உலக சாதனை படைத்தார் விராட் கோலி.!

Default Image

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-வங்கதேசம் போட்டியில் விராட் கோலி 16 ரன்களைக் கடந்த போது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே டி-20 உலகக்கோப்பையில் 1016 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

வங்கதேசத்திற்கு எதிராக கோலி 64 ரன்கள் அடித்ததன் மூலம் விராட் கோலி மொத்தம் 23 இன்னிங்ஸ்களில் 1065 ரன்களுடன் டி-20 உலகக்கோப்பைகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ஜெயவர்தனே 31 இன்னிங்ஸ்களில் 1016 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 3 ஆவது இடத்தில் கிறிஸ் கெய்லும்(965 ரன்கள்), நான்காவது இடத்தில் ரோஹித் சர்மாவும் (904 ரன்கள்) உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்