BREAKING NEWS:தூத்துக்குடியில் மருந்து கடைகள் திறப்பு…!!

Default Image

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன் தினம் போராட்டங்கள் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீவைத்தும் கொளுத்தப்பட்டன. நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் கடந்த 3 நாள்களாக கடைகள்,பேருந்துகள் இயங்காத நிலையில் தற்போது தூத்துக்குடி நகர பகுதியில் பேருந்துகளை தவிர்த்து மற்ற வாகனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. நகரில் ஆங்காங்கே மருத்துக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கடைகள் திறக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்