தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 64பேரை சொந்த ஜாமீனில்..! விடுவித்தது தூத்துக்குடி நீதிமன்றம்..!!

Default Image

தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 64 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி குற்றவியல் 1-வது நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை முன் ஆஜர்படுத்தப்பட்ட ((அவர்கள் இரவு முழுவதும் போலீசார் தங்களை தாக்கியதாக தெரிவித்து சட்டைகளை கழற்றி நீதிபதியிடம் காண்பித்தனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி பின்னர்)) அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 64 பேரையும் விடுவிக்கக் கோரி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி 64 பேரையும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்