குஜராத் தொங்கு பாலம் விபத்து – இன்று துக்க தினம் அனுசரிப்பு..!

Default Image

தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, இன்று  துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், குஜராத்தில் மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 134 பேர் உயிரிழந்ததை அடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் இன்று  துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்