புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்..!!ஜீன் 4ஆம் தேதி கூடுகிறது..!!

Default Image

புதுச்சேரி சட்டப்பேரவை ஜீன் மாதம் 4 ஆம் தேதி கூட இருப்பதாக பேரவை செயலர் அறிவித்துள்ளார்.  புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த  மார்ச் மாதம் 26 ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இதனையடுத்து கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 2018 – 19 நிதி ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், அது தொடர்பான விவாதங்கள் மற்றும் மசோதாக்கல் நிறைவேற்ற அடுத்த மாதம் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட உள்ளதாக பேரவை செயலர் வின்சென்ட் ராயர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்