அரையிறுதியில் இந்தியா தோற்கத்தான் போகிறது – சோயப் அக்தர்

Default Image

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறும் என சோயப் அக்தர் தெரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தான் விளையாடிய பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வலுவாக இருக்கிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் இந்தியாவுடன் நூலிழையில் தோல்வியடைந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் கடைசி பந்தில் 1 ரன்னில் ஆட்டத்தை இழந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர், இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறும் என்று கூறியுள்ளார். இந்திய அணி தோற்கடிக்க முடியாது அணி ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து இணையவாசிகளால் விமர்சிக்கபட்டுவருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்