பாஜக பந்த் தடை வழக்கு.! உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்பு.!

Default Image

பாஜக அறிவித்துள்ள பந்த் போராட்டத்திற்கு தடை கேட்ட வழக்கு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஏற்கப்பட்டது. 

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக அறிவித்தது.

இந்த பந்திற்கு தடை கேட்டு , சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.ஆர்.வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாஜகவின் பந்த்-ஐ சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும், அதற்கு தடை கேட்டும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரியிருந்தார். இதனை ஏற்று இன்று பிற்பகல் பாஜக பந்த் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்