இன்னும் சற்று நேரத்தில் தங்க கவச தீர்ப்பு.! 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.!
அதிமுக அன்பளிப்பாக வழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கபடும் என்கிற தீர்ப்பு வெளியாக உள்ளதால், வங்கி முன்னர் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 13 கிலோ தங்க கவசத்தை அன்பளிப்பாக வழங்கினார். வருடா வருடம் தேவர் ஜெயந்திக்கு இந்த கவசம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு, பின்னர் வங்கியில் பத்திரமாக பாதுகாக்கப்படும்.
தற்போது அதிமுக பிளவுபட்டு இருப்பதால், வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இந்த கவசதிற்கு உரிமை கோரி, இபிஎஸ், ஓபிஎஸ் தப்பினர் நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த வழக்கு மீதான தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றம் வழங்க உள்ளது.
தீர்ப்பு வெளியாக உள்ளதால், தங்க கவசம் இருக்கும் வங்கி முன் பாதுகாப்புக்காக , மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 போலீசார் பாதுகாப்பு காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தங்க கவசத்தை பாதுகாப்புடன் எடுத்து செல்ல காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.