என்னை காப்பாற்றியதற்கு நன்றி ! – அஸ்வினுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில்,கடந்த ஞாயிறு அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க நிலைமை மோசமானது.

அடுத்ததாக களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் அஸ்வின்,1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பதற்றமின்றி , அந்த பந்தை “வைடு” என கணித்து ஆடாமல் விட , 1 ரன்னும் 1 கூடுதல் பந்தும் கிடைத்தது.கடைசி பந்தில் 1 ரன் எடுத்து இந்திய அணி எளிதாக வென்றது.

இதையடுத்து, பிசிசிஐ வெளியிட்ட வீடியோ ஒன்றில், தினேஷ் கார்த்திக் அஸ்வினிடம் ” என்னை நேற்று காப்பாற்றியதற்கு நன்றி ” என சிரித்துக்கொண்டே சொன்னார். ஒருவேளை இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியடைந்து இருந்தால், தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் விமர்சித்து இருப்பார்கள்.

author avatar
Aravinth Paraman

Leave a Comment