தனது இறப்பு குறித்து முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் ஜமேஷா முபின் பதிவிட்டுள்ளார் – அண்ணாமலை

Default Image

சிலிண்டர் விபத்து குறித்து கோயம்புத்தூர் காவல்துறையின் அறிக்கை விசித்திரமாக உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கார் வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ளோம். என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம்.

தனது இறப்பு குறித்து முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் ஜமேஷா முபின் பதிவிட்டுள்ளார். இறப்பதற்கு முன்பு ஜமேஷா முபின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கவில்லை என டிஜிபி கூறுவாரா? தீவிரவாதிகளின் கூடாரமாக கோவை மாறி வருகிறது. சிலிண்டர் விபத்து குறித்து கோயம்புத்தூர் காவல்துறையின் அறிக்கை விசித்திரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கோவையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏன் தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்