கோவை கார் வெடிவிபத்து.! ஜமேசா முபினுடன் தொடர்புடைய 5 பேர் அதிரடி கைது.! 

Default Image

கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் உடன் ,தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர் ஏதேனும் நாச வேலைகள் செய்யும் முனைப்பில் திட்டம் போட்டிருந்தாரா  என்ற கோணத்திலும், அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் என தகவல்கள் கசிந்து வருகிறது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்