மும்பையில் அதிர்ச்சி!வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கியதால் குழுவின் நிர்வாகியை மூன்று பேர் கத்தியால் குத்தினர்!

Default Image

வாட்ஸ் அப் ( whats app) குழுவின் நிர்வாகியை  மும்பையில் மூன்று பேர் கத்தியால் குத்தினர். ஒரு உறுப்பினரை நீக்கியதை அடுத்து இந்த வெறிச்செயலில் அவர்கள் ஈடுபட்டனர். தாக்கப்பட்ட நபர் அகமதுநகரை சேர்ந்த சைதன்யா சிவாஜி என்ற 18 வயது இளைஞர்.

கல்லூரி மாணவர்கள் குழுவில் இருந்து சச்சின் என்பவரை நீக்கியதற்காக ஆத்திரம் அடைந்த சச்சினும் அவர் நண்பர்களும் சைதன்யா சிவாஜியை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.தப்பியோடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர் சைதன்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்