தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள்…!

Default Image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பதுண்டு. பேருந்துகள், ரயில்கள் என தங்களது பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் மக்கள் இடையூறின்றி பயணத்தை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், மக்கள் கூட்டம் மிகுந்த மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்