12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சில மாவட்டங்களில் தற்போதிருந்தே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களிலுல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 22ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்