கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.! 3 தமிழர்கள் உட்பட 7 பேர் உடல்கருகி உயிரிழப்பு.!
கேதார்நாத்திற்கு சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் சென்னையை சேர்ந்த 3 நபர்கள் உட்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை, உத்தரகாண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்திற்கு விமானி உட்பட 7 பேர் புறப்பட்டுள்ளனர்.
அவர்கள் செல்லும் வழியில் வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டு கிழே விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உட்பட 7 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதில், உயிரிலிந்த 7 பேரில் மூவர் சென்னையை சேர்ந்தவர்கள் அவர்கள், 63 வயதான பிரேம் குமார். 50 வ்யாதான கலா, 56 வயதான சுஜாதா ஆகியோர் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் என உத்தரகண்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் உடலை கைப்பற்றும் முயற்சியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த மத்திய விமானபோக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.