Congress Presidential Election: காங்கிரஸ் தலைவர் தேர்தல் – ராகுல் காந்தி வாக்களித்தார்!
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்தார் ராகுல் காந்தி.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூருவில் வாக்களித்தார். இதுபோன்று மற்றொரு வேட்பாளரான சசி தரூரும் தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி வாக்களித்தார். இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்னகல்லு கிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.