Russia attacked: உக்ரைனின் கீவ் மீது “காமிகேஸ்” ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய ரஷ்யா
உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்.
திங்கள்கிழமை காலை ரஷ்யா “காமிகேஸ்” ட்ரோன்கள் மூலம் கீவ் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய உயர் அதிகாரி வெளியிட்ட முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக் கூறுகையில்,”இது அவர்களுக்கு உதவும் என்று ரஷ்யர்கள் நினைக்கிறார்கள், ஆனால் இந்த நடவடிக்கைகள் விரக்தியை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
“எங்களுக்கு கூடிய விரைவில் வான் பாதுகாப்பு தேவை. தாமதிக்க எங்களுக்கு நேரமில்லை. வானத்தைப் பாதுகாக்கவும் எதிரிகளை அழிக்கவும் எங்களுக்கு அதிக ஆயுதங்கள் தேவை” என்று மேலும் தெரிவித்துள்ளார்.
ரஷிய படைகளுக்கு வெடிகுண்டு ஷாஹெட்-136 தாக்குதல் ட்ரோன்களை ஈரான் வழங்கியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.