#BREAKING: அக்.19ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! – சபாநாயகர் அறிவிப்பு

Default Image

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக பங்கேற்கவில்லை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார். இதன்பின், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலோசிக்க சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மட்டும் பங்கேற்றார்.

இந்த நிலையில், அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழுவில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 19ம் தேதி வரை 2 நாட்களுக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2022-23-ஆம் ஆண்டுக்கான கூடுதல் வரவு, செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்றும் இந்தி திணிப்பு போராட்டம் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்