அதிமுகவின் இந்த செயல் எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும் – ஓபிஎஸ்

Default Image

சட்ட பேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளோம் என ஓபிஎஸ் பேட்டி. 

இன்று காலை 10 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர்.

ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், சட்ட பேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளோம். சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்கிறோம்.

அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது. பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகள் விதித்து இருப்பது எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்