#T20WorldCup2022: டாஸ் வென்ற இலங்கை முதலில் பௌலிங்.!
டி-20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது, இதில் 8 அணிகள் விளையாடும் தகுதிச்சுற்று போட்டிகள் அக்-16 முதல் அக்-21 வரை நடைபெறுகிறது. தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதிகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,
நமீபியா அணி விவரம்: ஸ்டீபன் பார்ட், டேவிட் வைஸ், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(C), ஜான் நிகோல் லோஃப்டி-ஈட்டன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், ஜேன் கிரீன்(W), திவான் லா காக், மைக்கேல் வான் லிங்கன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ
இலங்கை அணி விவரம்: பதும் நிஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலகா, பனுகா ராஜபக்சா, தசுன் ஷனக(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா