திருவள்ளூரில் அருகே ​ 200 சவரன் நகைகள் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை!

Default Image

48 லட்சம் மதிப்பிலான 200 சவரன் நகைகள்,திருவள்ளூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கத்திமுனையில் கட்டிப்போட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை அருகேயுள்ள ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. நேற்றிரவு ராமச்சந்திரனின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி ரவித்தா ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர் பீரோவை உடைத்து, 200 சவரன் நகைகளை கொள்ளையடித்த அவர்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காரில் தப்பிச் சென்றனர். புகாரின் பேரில் விரைந்த போலீஸார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். ஆடிட்டர் வீட்டில் கத்திமுனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் சொகுசுக் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், மின்வாரிய ஊழியர் ரவியின் வீட்டில் 30 சவரன் நகை, ஐம்பதாயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்றிரவு ரவி அவரது மனைவி மகனுடன் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், 30 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்