இது என்ன தூத்துக்குடியா?இல்ல சிரியாவா?கொதித்த எழுந்த நேட்டீசன்கள்

Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கடுமையாக காவல்துறையினரையும்,தமிழக அரசையும் கடுமையாக விமரசித்து வருகின்றனர்.

இதேபோல் தூத்துக்குடி எம்எல்ஏ-வான திமுகாவை சேர்ந்த கீதாஜீவன் பற்றி ஒரு மீம்ஸ் வெளியாகியுள்ளது.

இதில் தூத்துக்குடியே கலவரமா இருக்கு எங்கையா தூத்துக்குடி எம்எல்ஏ-வான  கீதாஜீவன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அவங்கள ஆளையே காணும் இப்படிக்கு வாக்களித்த மக்கள் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

இதேபோல் மற்றொரு மீம்மில் இது என்ன சிரியாவா?இல்ல இது எங்க தூத்துக்குடிங்க என்று பரவி வருகிறது.

இதேபோல் ஈழத்திலயாவது அடுத்த இனத்தவன் தான் சுட்டுக் கொன்னான்,ஆனா இன்னைக்கு  சொந்த இனத்தவனே சுட்டுகொன்னுட்டு இருக்கான்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்