காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் திட்டம் ..!

Default Image

ஜம்மு-காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படைகள் கடந்த சில நாட்களாக அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லைப் பகுதி கிராமங்களில் பலத்தை அதிகரிக்குமாறு, ஜெய்ஸ் இ மொகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களிடம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அறிவுறுத்தியதுடன், பதான்கோட் போன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்த தூண்டிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு உதவிகரமாக செயல்பட சிறையில் இருந்து தலிபான் தீவிரவாதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்