லீவ் மட்டும் விடுங்க மேம்..! நான் உங்களுக்கு கோவில் கட்டுறேன்…! – புதுக்கோட்டை கலெக்டரிடம் கெஞ்சிய மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு கெஞ்சிய மாணவர்கள்.
தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 20-ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகமாக மழை பேயும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கம்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு இணைய பக்கத்தில் மெசேஜ் செய்து கெஞ்சி உள்ளனர். அந்த குறுஞ்செய்திகளின் புகைப்படத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், `லீவ் மட்டும் விடுங்க மேம்… உங்களுக்கு கோவில் கட்றேன்.. என் மனசுல, உங்களின் முடிவில் தான் எங்கள் சந்தோசம் இருக்கு என்றெல்லாம் ஆட்சியருக்கு மெசேஜ் செய்துள்ளனர்.