முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இடைத்தேர்தல் சின்னம் இரட்டை வாள் கேடயம்.! தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு.!

Default Image

மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு இரட்டை வாள் மற்றும் கேடயம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.   

மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு பகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட இரண்டாக பிறந்த சிவசேனா கட்சியின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும் சிவசேனா கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டனர்.

இதனை தொடர்ந்து கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை முடக்கியது. மேலும், இரு தரப்பும் புதிய கட்சி பெயரை தேர்வு செய்து, சின்னத்தையும் தேர்வு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா – உத்தவ் பாலே சாகிபின் தாக்கரே என கட்சி பெயரையம் , எரியும் ஜோதி சின்னத்தை தேர்தல் சின்னமாகவு தேர்வு செய்தனர்.

அதே போல மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனது கட்சி பெயரை பாலே சாகிபின் சிவசேனா என மாற்றியது. அதனை தொடர்ந்து சூரியன், வாள், அரசமரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்தல் சின்னமாக தேர்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் விருப்பத்தை பரிந்துரை செய்துள்ளனர்.

இதில் தற்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு இரட்டை வாள் மற்றும் கேடயம் அடங்கிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்