டெல்லியில் ஈரமான அவுட்-பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!!

Default Image

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டியில் ஈரமான அவுட்- பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இன்று தொடரை முடிவு செய்யும் 3ஆவது மற்றும் இறுதிப்போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக மைதானம் ஈரப்பதமாகி இருக்கிறது இதனால் மைதானத்தின் அவுட்-பீல்டு ஈரமாக இருப்பதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1:00 மணிக்கு டாஸ் போடவேண்டிய நிலையில் தற்போது 1:30 மணிக்கு மைதானம் மேற்பார்வையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஆட்டம் தொடங்குவது பற்றி அறிவிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்