தேவர் ஜெயந்திக்க்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.! பாஜக சார்பில் அழைப்பு.!

Default Image

வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு , மறைந்த முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்த பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  

வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா அவர் பிறந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே , பசும்பொன்னில் நடைபெறுகிறது .

இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக பாஜக சார்பில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்க்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரவேற்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்து, அதன் பின்னர் கார் மூலம் கோரிபாளயத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார் எனவும்,

அதன்பிறகு, முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்