60வது தேவர் குருபூஜை.! கலந்துகொள்பவர்களுக்கு காலக்கெடு.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

Default Image

தேவர் குருபூஜை வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி வரும் 21ஆம் தேதிக்குள் அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

வருடாவருடம் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா, தேவர் ஜெயந்தி விழாவாக கொண்டாப்படும். அன்றைய தினம் அவர் பிறந்த ஊரான ராமநாதபுர மாவட்டம் கமுதி வட்டத்திற்கு உட்பட்ட பசும்பொன் கிராமத்தில் குருபூஜை விழா நடைபெறும்.

இந்த குருபூஜையில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பின்னர் அதற்கான நெறிமுறைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக, தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள கமுதி வருபவர்கள் வரும் 21ஆம் தேதிக்குள் மாலை 5.45க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்