சென்னை அரசு மருத்துவமனை மேற்கூரை பெயர்ந்து விழுந்து பரபரப்பு.! அதிர்வினால் விழுந்ததாக தகவல்.!

Default Image

சென்னை கேகே நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் மேற்கூரை சிறு சிறு பகுதிகள் பெயர்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை புறநகரில் மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அங்குள்ள நோயாளிகளிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கேகே நகரில் இயங்கி வரும் புறநகர் அரசு மருத்துவமனையில் இன்று மேற்கூரையில் இருந்து சிறு சிறு பகுதிகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அந்த குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியே வந்தனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து பார்க்கையில், மருத்துவமனையின் மேற்பகுதியில் பூனரமைப்புபணிகள் நடைபெற்று வருவதால், அதில் ஏற்பட்ட அதிர்வு தாங்காமல் இந்த மேற்கூரை சிறுது சிறிதாக பெயர்ந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்