காங்., தலைவர் தேர்தலில் சசிதரூரை ஆதரிக்கிறேன் – கார்த்தி சிதம்பரம்
கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இருப்பினும், கார்கேவுக்கே ஆதரவு அதிகம் இருப்பதால், தலைவர் தேர்தலில் அவருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூரை ஆதரிக்கிறேன் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், அகில இந்திய காங்கிரஸ் தேர்தலில் சசிதரூரை ஆதரிக்கிறேன். அவரது நவீனத்துவமான அணுகுமுறை பாஜகவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்து போரிட உதவும். கட்சியை கடந்து மக்களிடமும் சென்றடைவோம். வழக்கமான நடைமுறை உதவாது. கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என பதிவிட்டுள்ளார்.
I support @ShashiTharoor for @INCIndia President. His pragmatic modernism coupled with his appeal beyond the party, is crucial to fight @bjp4india’s divisive politics. Status quo & business as usual won’t help our party. There’s an urgent need for reformist thinking in our party. pic.twitter.com/caIMvz6fUz
— Karti P Chidambaram (@KartiPC) October 8, 2022