அக்.9-ம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் – பாமக தலைவர் அன்புமணி
அக்.9-ம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.
காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பசுமைத்தாயகம் சார்பில் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள, காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தி, போர்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் காலநிலை செயல்பாட்டுக்கான சென்னை ஓட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள, காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தி, போர்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி 09.10.2022 அன்று நடைபெறும் காலநிலை செயல்பாட்டுக்கான சென்னை ஓட்டத்தில் (#ChennaiRun) நான் கலந்துகொள்கிறேன். #ChennaiClimateAction pic.twitter.com/L4tokl0zxx
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 5, 2022