அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன – ஜெயக்குமார்

Default Image

அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் பேருந்தில் போக ஆவமானப் படுகிறார்கள்; அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன.

ஒபிஎஸ்-க்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை. அவர்களது செயல்பாடுகள் அறிக்கைகள் மற்றும் டிவிட்டரில் மட்டும் தான்; பருவமழை வரவுள்ளது. மழை நீர்வடிகால் பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்