மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளாத காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…! டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம்

Default Image

மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ்க்கு டிஜிபி ஆறுதல் கடிதம். 

காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ், தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்டதால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், அதிகாரி சந்தனராஜ் அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும்,  அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொளி வாயிலாக கண்டறிய நேர்ந்தது.
தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடை பட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. விடுப்பு
வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாள்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

dgp

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்