காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக அசோக் கெலாட் முடிவு?

Default Image

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு என தகவல்.

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, உட்கட்சி பூசல் நிலவிவரும் சூழலில், தலைவர் போட்டியில் இருந்து விலக கெலாட் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்கும் சோனியா காந்தியின் முடிவை ஏற்காததால் அசோக் கெலாட் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தவிடாமல் கெலாட் ஆதரவாளர்கள் தடுத்து பைலட் முதல்வராக கூடாது என வலியுறுத்தியிருந்தனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்காக தேர்தலின் வாக்குப்பதிவு  அக்.17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அக்.19-ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சமீபத்தில் அறிவித்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறியிருந்தார்.  காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலை இருக்கும்போது தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்படி அசோக் கெலாட் தனது பதிவியை ராஜினாமா செய்தால், அந்த பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்கும் சோனியா காந்தியின் முடிவை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்