முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு…!
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில்,இக்கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.
அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.