டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து குறிப்பு எழுதிய முதல்வர்..!

Default Image

டிஜிபி அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து குறிப்பு எழுதியுள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பின் அலுவலகத்தில், மகிழம் மரக்கன்றை நட்டார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து குறிப்பு எழுதியுள்ளார். அந்த குறிப்பில், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்தும், உயரதிகார்களை சந்தித்ததும் எனக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.

காவல்துறை உங்கள் நண்பன் என்ற காவல்துறை வாசகம் சமூகநீதி, சமத்துவம் மனித கொள்கைகளை கடைபிடிப்பதை  பறைசாற்றுகிறது. காவல்துறை அதன்படி செயல்படுவதை பாராட்டுகிறேன். மக்கள் போற்றும் பாதுகாப்பு பணியாற்றி வரும் காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சே.சைலேந்திரபாபு தொடங்கி அனைத்து உயர்காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்கு துணை நிற்கும் காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்